nav-left cat-right
cat-right

ரமணி சந்திரன், வலையுலக ஃபோபியா – சொல்ல மறந்த கதைகள்

எப்போதும் ரமணிசந்திரன் அவர்களின் எழுத்து மேல் பெரிதாய் ஒரு மரியாதை இருந்ததில்லை எனக்கு. இருப்பினும் சும்மா இருக்கப் பொறுக்காமல் சண்டித்தனம் செய்யும் மனதிற்கு அப்போதைக்கு கைகளில் அகப்பட்டது எதுவாயினும் படித்துப் பார்க்க விருப்பம் இருந்திருக்கிறது. இரண்டு நாட்களுக்கு முன்பு அப்படி ஏதேச்சையாய் இரு புத்தகங்களை படிக்க நேர்ந்துத் தொலைத்தது. முதலாவது ஒன்றை படிக்க ஆரம்பித்த சரியாய் பதினைந்தாவது நிமிடத்தில் அது நடந்தது. அடி மனதிலிருந்து பொங்கும் உச்சகட்ட கோபத்தில் அந்த புத்தகத்தை சுவற்றில் விசிறி அடித்தேன்.

எப்போதும் என்னைப்போலத்தான் மற்றவர்களும் சிந்திக்க வேண்டும் என்ற பைத்தியக்காரத்தனமான சிந்தனை எனக்கு இருந்தது கிடையாது என்றாலும், பல வாசகர்கள் உருகி உருகி அம்மா, அம்மா என்று அழைத்துக் கொண்டிருப்பதும், இவரது கதைகளை சோறு தண்ணி இல்லாமல் படித்துக் கிடப்பதுமான தமிழ் சூழல் மீதும், இவரது தீவிர வாசகர்களான எனது சில நண்பர்கள் மீதும் எனக்கு ஏனோ கண்மண் தெரியாமல் கோபம் வந்தது.

இவரது ஒவ்வொரு புத்தகத்தின் ஆரம்பத்திலும் “அருணோதயம் ரமணன்” அவர்களின் “இன்று லட்சக் கணக்கான வாசகர்களின் மனதில் நீங்கா இடம் பெற்றிருக்கும் ரமணி சந்திரன்…” என்ற டெம்ப்ளேட் வார்த்தைகளுடன் தொடங்கும் முன்னுரைக்கு சற்றும் குறைவில்லாது ஒரு டெம்ப்ளேட் கதையோடு ஒவ்வொரு புத்தகமும் வந்து பெற்றி பெற்றுக் கொண்டிருக்கிறது.

இளம் வயதில் தொழிலதிபராய் இருக்கும் ஒரு நாயகன், நடுத்தரக் குடும்பத்தைச் சேர்ந்த பாசமான நாயகி, இருவரில் எவருக்கேனும் ஏதேனும் ஒரு காரணத்தால் எதிர்பாலினத்தவரைக் கண்டாலே ஆகாது. நாயகன் பெரும்பாலும் மிக அழகாயும், புத்திசாலியாயும் இருப்பான். நாயகி அவனை எவ்வளவு தான் வெறுத்தாலும் அவன் சிரிக்கும் போது அப்படியே சொக்கிப் போவாள். நாவலின் பத்தாவது அத்தியாயத்தில் எதோ ஒரு காரணத்திற்காய் நாயகிக்கும், நாயகனுக்கும் பொய்யாய் ஒரு கல்யாணம் நடக்கும். நாயகி அவன் வீட்டிற்கு மனைவியாய் நடிக்கப் போவாள். திருமணத்திற்கு முன்பு ப்ளேபாயாக இருந்த நாயகன், கல்யாணத்திற்குப் பின்பு “மெட்டி ஒலி கோபி”யை விட ரொம்ப நல்லவனாய் நடந்து கொள்வான். நடுவில் வில்லியாய் எதாவது ஒரு இளம் பெண் அவன் மீது ஈஷிக் கொண்டு வளைய வருவாள். கடைசியில் இருவரும் எல்லா பிரச்சினைகளையும் தீர்த்து விட்டு ஒன்று சேருவார்கள். பெரும்பாலான கதைகளில் படுக்கையறையில் நாயகி தீரா காதலுடன் நாயகனின் அணைப்புக்குள் தன்னை சுருக்கிக் கொண்டு நிற்கும் ஒரு வகையான கனவுச் சூழ்நிலையுடன் முடிவடைந்திருக்கும்.

இந்த ஒரே கதையை எத்தனை முறை ரமணிசந்திரன் அவர்கள் பல்வேறு விதங்களில் திகட்ட திகட்ட கொடுத்தாலும் தமிழ் கூறும் நல்லுலகு மறுக்காமல் வாங்கி வாசித்து சந்தோஷப் பட்டு உருகிக் கொண்டிருக்கிறது. பெரும்பாலான நடுத்தர மற்றும், கீழ் நடுத்தர பெண்களின் வாழ்நாள் கனவாக நல்ல கணவனை பெறுவதே என்ற சூழலை நாம் உருவாக்கி வைத்திருப்பதுவும், பெண்களுக்கு இயல்பாகவே மறுக்கப் படும் பாலியல் ஏக்கங்களும், விருப்பங்களும், நிஜத்தில் நடக்காத கணவனின் அன்பான ஆக்கிரமிப்பை புத்தகங்களிலாவது தேடிப்பார்த்து படித்து சுய இன்பம் பெற்றுக் கொள்ளுவதும், எல்லாவற்றுக்கும் மேலாய் மெல்ல மெல்ல Submissive நடத்தைக்கு தான் மாற வேண்டியதன் பொருட்டும் பெண்களுக்கு ரமணி சந்திரனின் கதைகள் பொதுவாய் பிடித்துப் போகிறதோ என்ற எண்ணம் ரொம்ப காலமாகவே எனக்குள் இருந்து வந்திருக்கிறது.

நான் விசிறி அடித்த புத்தகத்திலும் இப்படி ஒரு டெம்ப்ளேட் இல்லாமலில்லை. ஆனால் என்னை மிகவும் கோபத்திற்குள்ளாக்கியது நாயகன் நாயகியை விரும்புவான். அப்போதே நாயகன் சொல்லுவான் “நான் இதுவரை ஆசைப்பட்டு எதையும் அடையாமல் விட்டதில்லை” என்று.  நாயகி நிர்தாட்சண்யமாய் அவனை மறுத்து விட ஒரு சந்தர்ப்பத்தில் அவளை மயக்கத்திற்குட்படுத்தி விருப்பமில்லாமல் பாலியல் உறவு கொண்டு விடுவான். தமிழ் சினிமாவின் பாணியில் சொல்லுவதென்றால் அவளை கெடுத்து விடுவான். (எவன்தான் கண்டு பிடிச்சானோ இப்படி வாக்கிய அமைப்பை).

இந்த அத்தியாயங்களில் நாயகியின் மன நிலையையும், நாயகனின் வெற்றிக் களிப்பையும் சொல்லி இருப்பார் நாவாசிரியர். பின்பு வேறு வழியில்லாமல் வெறுப்புடன் அவனை திருமணம் செய்து கொண்டாலும் நாளாக நாளாக அவன் மேல் மெதுவாய் ஈர்ப்பு கொண்டு கடைசி அத்தியாயத்தில் காதல் நிரம்பிய வசனங்கள் உடைய, நாயகனின் அணைப்பில் நாயகி தன்னை மறந்து கிடக்கும் ஒரு படுக்கையறைக் காட்சியுடன் நாவல் முடிகின்றது. இதில் இன்னொரு முக்கியமான விஷயம் பத்து வருடங்களுக்கு முன்பே எழுதப்பட்ட இந்த நாவல் திரும்ப திரும்ப வாசகர்களால் படிக்கப்பட்டு இப்போது பதினைந்தாவது பதிப்பைத் தொட்டிருக்கிறது.

இன்னொரு கதையில் நாயகன் சுத்தமாய் ப்ளேபாய். வழக்கம் போல் பணக்காரன், தொழிலதிபர். நாயகன் நாயகியை படுக்கைக்கு அழைப்பான். நாயகி இவனைப் போய் காதலித்தோமே என்று பிரிந்து சென்று கிராமத்திலிருப்பாள். நாயகியின் சகோதரி ஏதேனும் ஒரு பணக்காரனிடம் செட்டிலாக வேண்டும் என்ற உயர்ந்த நோக்கத்துடன் ஆள்: தேடிப்பார்த்து, கடைசியில் அந்த நாயகனுடனேயே அவனை வளைத்துப் போடும் பொருட்டு அவனுடன் உறவு கொண்டு ஒரு குழந்தையைப் பெற்ரு விட்டு இறந்து விட, தியாகச் சொரூபமான நாயகி அப்பாவைப்போலவே இருக்கும் அந்தச் சிறுவனை வளர்த்துக் கொண்டிருப்பாள். திடீரென்று ஒருநாள் அவனுக்கு ஞானோதயம் வந்து இவளிடம் திரும்பி வர, வழக்கம் போல் ஆரம்பத்தில் வீம்பாய் பேசும் நாயகி கடையில் அந்த நாயகனுடன் ஒன்று சேர்ந்து தனது வாழ்க்கையை மறுபடி அவன் கையில் கொடுத்து விட்டு, வாழ ஆரம்பிப்பாள். இந்த நாவலும் பன்னிரண்டு முறைக்கும் மேல் மறுபதிப்பு செய்ப்பட்டிருக்கிறது.

என்னைக் கேட்டால் ஒன்று சொல்லலாம் ரமணி சந்திரன் நாவலின் நாயகிகளை பேசாமல் “சுயமரியாதை இல்லாத ஜென்மங்கள்” என்று அடைமொழி இட்டுக் கூப்பிட்டுக் கொள்ளலாம். அதைவிட இப்படி எல்லாம் எழுதும் இவர்தான் பெண்களின் எழுத்தாளர் என்று எவரேனும் சொல்லும் போது சொல்லுபவர் மீது ஒரு பரிதாப உணர்வுதான் ஏற்படுகிறது. ஆண் கொஞ்சம் அப்படி இப்படித்தான் இருப்பான், பொம்பளைப் புள்ளைதான் கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிப் போகணும் என்ற ஒரு வகையான தாழ் மன உணர்வுகளையும், அழகியலும், பாலியல் ஏக்கங்களும், மசாலாவும் சேர்ந்து கலந்த ஒரு கனவுச் சூழ்நிலையில் பல வாசகர்களை தன் சுயம் தொலைத்து விட்டு வாழ வகை செய்ததையும் தாண்டி, பெண்களின் எழுத்தாளர் என்று சொல்லிக் கொள்ளும் ரமணி சந்திரனின் எழுத்துக்கள் சாதித்தது என்ன?

————————————–

தசாவதாரத்தைப் பற்றி எழுதவே பயமாயிருக்கிறது. ஏதோ ஃபோபியா வந்தது போல எங்கு திரும்பினாலும் அதே புராணம்தான். அந்த காரணத்தினாலேயே தலைப்பில் கமல் என்றோ, தசாவதாரம் என்றோ வைக்க வெறுப்பாயிருக்கிறது. ஒட்டு மொத்தமாய் பார்த்தால் படம் பார்த்து நான் சற்றே ஏமாற்றம் அடைந்தது என்னவோ உண்மைதான். படத்தின் முதல் அரைமணி நேரமும்,  கடைசி அரைமணி நேரமும் கொடுத்த பிரமிப்பை படம் முழுதுமே கொடுத்திருந்தால் இப்படம் ஒட்டு மொத்த தமிழ் சினிமாவிலேயே சிறந்த படங்களில் ஒன்றாய் வந்திருக்கக் கூடும். நடுவில் ஏற்படும் தொய்வுகளினால் அது தவறிப் போயிருந்திருக்கிறது. ஆனால் ஒட்டு மொத்தமாக இந்த படத்தை குப்பை என்ற அளவுக்கு என்னால் சொல்லத் தோன்ற வில்லை. மீடியாக்களின் அதிககபட்ச ஹைப்பும், நம்முடைய அதிகபட்ச எதிர்பார்ப்பும் சேர்ந்து மற்றவர்களுக்கு எல்லாம் பாஸ்மார்க் 35 என்றால் கமலுக்கு மட்டும் 80 என்று வைத்து அளவிடத் தோன்றி இருக்கின்றது.

அதற்காக இந்த படத்தில் குறைகளே இல்லையா என்றெல்லாம் கேட்க வேண்டாம். ஒன்றில்லை பல குறைகளைப் பட்டியலிட முடியும். 2006 ஆம் வருட மாடல் காரை வைத்துக் கொண்டு 2004 ல் அமெரிக்காவில், பயோ லேபிலிருந்து கமல் தப்பிச் செல்வது, சிட்டிசன் அஜீத் போன்ற சில மேக்கப்புகள், கிருஷ்ணவேணிப் பாட்டியின் வேகம் மற்றும் அந்த வயதில் எல்லார் தோள்களிலும் மேல் கால் வைத்து எளிதில் ஓடுவது, ஆளவந்தானில் இருப்பது போன்ற அதே வகை க்ளைமாக்ஸ் சேஸிங், வில்லனாக சித்தரிக்கப் பட வேண்டிய புஷ்சை சமரச காரணங்களுக்காக ஹீரோவினைப் போல காமித்தது, என்று பல விஷயங்களை பட்டியலிட்டுக் கொண்டே போகலாம்.

சொல்லப்போனால் இது போன்ற பல குறைகளை கமலின் முயற்சிகளுக்காக பொறுத்துக் கொண்டு போக வேண்டி இருக்கின்றது. கமல் சொன்னால் அப்படியே கேட்டு செய்யும் சந்தான பாரதி போன்றோரை விட, கமலை தட்டி, வேகத்தடை போட்டு கொண்டு செல்லும் இன்னொரு ஆளை கமல் தன் பக்கத்தில் வைத்தே ஆக வேண்டும். அப்படி ஒன்று மட்டும் ஒன்று நடந்து முதல் அரைமணி நேரம் போலவே முழுதுமாய் ஒரு படம் மட்டும் வந்து விட்டால் அது உலகம் முழுதும் பேசப்படும் ஒரு படமாய்தான் இருக்கும் என்ற நம்பிக்கை ஒரு சில காட்சிகளைப் பார்க்கையில் ஏற்படுகின்றது. அந்த உணர்வை கடைசி வரை ஏற்படுத்தாததுதான் படத்தின் மிகப் பெரிய குறையே.

அவதார் சிங் மருத்துவரிடம் பேசும் காட்சிகளிலும், வின்சென்ட் பூவராகவனின் பாத்திரப் படைப்பும் எனக்கு அப்படி ஒரு சந்தோசத்தை தந்திருக்கின்றது. படம் பூடகமாய் பல விஷயங்களைப் பேசிச் சென்றிருக்கிறது. பூவராகவன் என்ற தலித் முன் வரும் வின்சென்ட் என்ற கிறித்துவப் பெயர் சொல்லும் அர்த்தங்கள் பலப் பல. ஒரு இஸ்லாமிய குடும்பத்தின் மீது ஏற்பட்ட சந்தேகத்தால் அந்த தெருவிலுள்ள 200 இசுலாமியக் குடும்பங்களையுமே மசூதியில் வைத்து விசாரணை செய்யும் அடக்கு முறை காட்சியை தைரியமாய் சொல்ல முயன்றிருப்பது மகிழ்ச்சியை ஏற்படுத்துவதாய் இருக்கின்றது. இந்தக் கதைகளெல்லாம் தமிழ் நாட்டில் நடக்காமலில்லை. மேலப்பளையத்திலும் இன்னும் பல ஊர்களிலும் இன்றும் இசுலாமிய பலர் வெறும் சந்தேகத்தினடிபடையில் போட்ட வழக்குகளால் தன் வாழ்க்கையை தொலைத்து நின்றிருக்கும் கதைகளை அந்த காட்சி எனக்கு உணர்த்தியது. ஒரு தமிழ் படத்தில் வாய் ஓயாமல் பேசும் தெலுங்குக்காரரை படம் ம்ழுக்க அதே நேட்டிவிட்டியுடன் வர விடும் துணிச்சல் வெகு சிலருக்கு மட்டுமே இருக்கின்றது.

மணல் கொள்ளையை எதிர்க்க வேண்டியதன் அவசியத்தை இவ்வளவு தீவிரமாய் படங்களில் காட்டியதாயும் எனக்கு நினைவில்லை. இப்படி சின்ன சின்ன சந்தோசப் படும் விஷயங்களும், குறைகளும் படம் முழுக்க நிறைந்திருக்கின்றது.

ஆளரவமில்லாத காட்டின் நடுவே ஓர் வீட்டில், ஒர் அழகிய இளம் பெண்ணுடன் தனியே ஒரு இரவை கழிக்கும் இளைஞன் அன்றிரவு அவளை எந்த வித தவறான் எண்ணத்துடன் அணுகாமலிருந்தால் மறு நாள் காலையில் அந்த பெண் அந்த இளைஞனைப் பற்றி என்ன நினைப்பாள???நல்லவன்னுதான் நினைப்பாள் என்று ஒற்றை வார்த்தையில் சொன்னீர்களேயானால் இல்லை தவறு.

அந்த பெண் ஒரு சாதாரணப் பெண்ணாயிருந்தால் அவன் ரொம்ப நல்லவன்னு நினைப்பாள். அதே பெண் மெச்சூரிட்டியான பெண்ணாகவோ அல்லது தன்னை மெச்சூரிட்டியான பெண்ணாகவோ நினைத்துக் கொள்பவளாய் இருந்தால் அந்த ஆண் தன்னை அடைய நினைத்து போடும் வேஷங்களில் இதுவும் ஒன்று என்று நினைப்பாள். அதே பெண் ஒரு குழந்தையைப் போன்ற கள்ளம் கபடம் இல்லாதவளாயிருநாதாலோ அல்லது பைத்தியக்காரியாயிருந்தாலோ அவன் மீது அந்த ஒரு சம்பவத்தால் புதிதாய் எந்த ஒரு எண்ணமும் ஏற்படாமல் முந்தின நாள் இரவு படுக்கப் போகும் போது எந்த எண்ணத்துடன் இருந்தாளோ அதே எண்ணத்துடனேயே மறு நாள் காலையில் இருப்பாள். இல்லை அந்தப் பெண்ணே அவன் மீது அதீத காமம் கொண்டவளாயிருந்தால் அவன் தன்னை அணுகாமல் குறித்து எரிச்சலுற்றிருப்பாள் அல்லது அவனது ஆண்மை குறித்தே சந்தேகப் பட்டிருப்பாள்.

ஆக இங்கு சம்பவம் என்னவோ ஒன்றுதான். ஆனால் அவை ஏற்படுத்தும் விளைவுகள் ஆட்களைப் பொறுத்து மாறி நிற்கின்றது.

தசாவதாரம் குறித்தான நண்பர்  பைத்தியக்காரனின் பதிவையும் அப்படிப்பட்ட ஒரு வகையாகத்தான் ஏனோ எனக்குத் தோன்றுகிறது. எப்போதும் திரைப்படங்களிலும், புத்தகங்களிலும் நுண்ணரசியலைத் தேடித் தேடி கண்டு பிடிக்க முயலும் எனக்கு அவரது இந்த விமர்சனம் ஏற்றுக் கொள்ளும்படியானதாய் இருக்க வில்லை. குறிப்பாய் முற்போக்கு பார்ப்பனர்கள் ஆபத்தானவர்கள் என்ற குற்றச் சாட்டு, ஒருவர் என்ன செய்தாலும் பிறப்பினடிப்படையில் பார்ப்பனர்ரய் இருந்து விட்டால் உரித்துக் காயப்போட நினைக்கும் தீவிரத்துவம் எனக்கு வருத்தத்தையே தருகின்றது. இன்னொரு நண்பர் கூட கமலஹாசனிடம் பூனைக் குட்டி மறைந்து நிற்கின்றது அது எப்போது வேண்டுமானாலும் வெளியே வரலாம் என்று சொல்லும் போது கமல் சாதீய அடுக்கில் உயர் சமுதாயத்தில் பிறந்தது அவர் குற்றமா என்று கேட்கத் தோன்றுகிறது.

தனது பெரும்பான்மையான செய்லகளில் கடவுள் மறுப்பையும், மனிதம் சார்ந்த விஷயங்களையும் தொடர்ந்து வெளிப்படையாகவோ மறைமுகமாகவோ எக்ஸிபிட் செய்து கொண்டிருக்கும் போதே இத்தகைய குற்றச் சாட்டுகள் எழுப்பப் படும் போது, கமல் மட்டும் ரஜினியைப் போன்று பாபா, ஆன்மீகம், ரிஷிகேஷ் என்று பேசிக் கொண்டிருந்திருப்பாரேயானால், வலைப் பதிவுகளில் முக்கால்வாசி பேருக்கு மேல் கமலின் மீது கொலை வெறியுடன் திரிந்திருப்பார்கள். எனக்குத் தெரிந்து கமல் மீது பலர் சந்தேகம் கொள்ள ஒரே காரணம் அவருக்கும், மதன், க்ரேஸி,சுஜாதா,சாருஹாசன்,மணிரத்னம், சங்கர் போன்றோருடன் இருக்கும் நெருக்கம். இதை ஒரு காரணமாக என்னால் ஏற்றுக் கொள்ள முடிய வில்லை.

நான் இப்படிச் சொல்வதற்கு அர்த்தம் கமல் விமர்சனத்திற்கு அப்பாற்பட்டவர் என்பதல்ல. ஒருவர் தனது செயல்களில் சாதிய அடுக்குகளை ஆதரித்தும், வர்ணாசிரம தர்மத்தை தூக்கிப் பிடித்தும் நடந்து கொள்வாரேயெனில் அவரது செயல்களை குத்திக் கிழித்துப் போடுவதில் தவறேதும் இல்லை. ஆனால் எப்படி பிறப்பினடிப்படையில் ஒருவரை தாழ்ந்தவர் என்று சொல்லி ஆதிக்கம் செலுத்துவது எவ்வளவு தவறான செயலோ, அதே அளவு தவறு பிறப்பினடிப்படையில் ஒருவர் உயர் சாதியைச் சேர்ந்தவர் “என்னிக்கு இருந்தாலும் அவன் தன் ஜாதிப் புத்தியைக் காட்டியே தீருவான் என்பது”.

பின்குறிப்பு 1: “ஏம்பா ஆவனவன் ரமேஷ் பிரேம், ஜெயமோகன், சாரு எழுதியதை வெச்சு சண்டைப் போட்டுக்கிட்டிருக்கான். நீ இப்போதான் ரமணி சந்திரனை குற்றம் சொல்லிக்கிட்டிருக்க” என்ற எண்ணம் உங்களில் எவருக்கேனும் இப்பதிவைப் படிக்கும் போது ஒரு கணமேனும் தோன்றியிருக்குமானால், தலையில் ஒரு ஒளி வட்டத்துடன் உங்களுக்கென்று ஒரு எல்லைக் கோட்டை வகுத்துக் கொண்டு பதிவுலகில் வலைய வந்துக் கொண்டிருக்கிறீர்கள் என்று அர்த்தம். உங்களை நீங்களே ஒரு முறை சுய பரிசோதனை செய்து கொள்ளும் நேரம் இது. :)

பின்குறிப்பு 2: பதிவின் இரண்டாவது பகுதி ஒருவேளை சர்ச்சையைக் கிளப்பலாம். கருத்தியல் ரீதியிலான எனது இந்த எதிர் குரலை பைத்தியக்காரன் சரியாக புரிந்துக் கொள்ளுவார். ஆகையால் வேறு எவரேனும்ம் அதிகமாய் உணர்ச்சி வசப்பட்டு இங்கு வந்து சவுக்கை சுழற்ற வேண்டாம். பொறுமையாய் வந்து எதிர் வினையாற்றுங்கள்.

72 Responses to “ரமணி சந்திரன், வலையுலக ஃபோபியா – சொல்ல மறந்த கதைகள்”

  1. //What you have focused in this article that all these women are going behind such trash things (creations of Mrs. Ramanichandran) by spending their valuable time. Am I correct?//

    இல்லைங்க. இதை எல்லாம் போய் ஏன் படிக்கறீங்கன்னு நான் அவரது வாசகர்களிடம் கேட்டால் அவர்களது ரசனையில் நான் தலையிடுவதாய் இருக்கும். என்னுடைய முக்கிய நோக்கம் அவர்களது எழுத்துக்களில் முன்வைக்கும் கற்பிதங்களை கேள்விப்படுத்துவது, ஒழுக்க விதிகளை ஆண்களுக்கு ஒருவாறும், பெண்களுக்கு ஒருவாறும் விதிப்பதை விமர்சனம் செய்வது என்ற முறையிலேயேதான்.

    அது மட்டுமல்ல எனது இப்பதிவின் நான் எவரையேனும் சிறுமைப்படுத்த முன்றிருந்தால் அது ரமணி சந்திரனையும் அல்ல அவர்களது வாசகர்களையும் அல்ல. அது அவர்களது கதையின் நாயகிகளையும், நாயகன்களையுமாகத்தான் இருக்கும்.

    //See what is our culture ? Oruvanukku Oruthi forms the base for true relationship. Also Love and affection, Faith & Give and take are some of the qualities needed for true relationship.//

    கலாச்சாரம், குடும்ப அமைப்புகள் ஆகியவற்றை நீங்கள் பாரம்பரியம் எனும் கண்ணாடி வழியே பார்க்கும் போது ஒரு மாதிரியும், பெண்ணியம் எனும் கண்ணாடி வழியே பார்க்கும் போது ஒரு மாதிரியும் தெரியும். அதை பற்றி விவாதிக்க வேண்டுமென்றால் ஒரு தனித் தொடரே எழுத வேண்டும். ஒரு பாராவில் என்னால் பதில் அளிக்க முடியும் விஷயமல்ல அது. ஒன்றே ஒன்று சொல்லலாம். தனி மனித உரிமைகளை மதிக்காத அமைப்பும், கலாச்சாரமும் சிறந்த ஒன்றாய் இருக்கவே முடியாது.

    //Even though Hero is really a flirt person Herione is following the culture and putting her efforts to change him.//

    இந்த இடத்திலதான் நான் வேறுபடுகின்றேன். ஏற்கனவே சொல்லி இருந்தது போல ஆண் கொஞ்சம் அப்படி இப்படித்தான் இருப்பான், பொம்பளைப் புள்ளைதான் கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிப் போகணும் என்ற ஒரு வகையான தாழ் மன உணர்வுகளை என்னால் ஒத்துக் கொள்ள முடிய வில்லை. அதுதான் இங்கே பிரச்சினையே.

    //I am not forcing my opinion on you.I am justifying her writings. Thats all. //

    புரிதலுக்கு நன்றி. எனது நிலைப்பாடும் அதுவே.

    இதுக்கு அப்புறம் நீங்க பாராட்டினதுக்கும், எதிர் வினைகளை கண்ணியத்துடன் எடுத்துச் சொன்னதற்கும் இன்னொரு நன்றி.

  2. பதிவு மிக அருமை.. :) (ரொம்ப லேட்டா வந்து கமெண்ட்டுரனோ?? பரவால்ல.. ;) ) பின்னூட்டங்களும் அருமை.. :)

  3. Sir.. நீங்க ரொம்ப பொறுமைசாலியா இருக்கீங்க :)
    அமாம், ராஜேஷ் குமார் ஆயிரமாவது நாவல் எழுதி கின்னஸில் இடம் பெற்றிருக்கிறாரே. அவருக்கு எதாவது செய்தி வைத்திருக்கிறீர்களா ;-)

  4. Janu says:

    Huh..
    Nanda… I am sorry I have no time to write a comment in tamil. very very excellent writing. I mean your articles…I thousand percent accept what you said about Ramani chandran ..I wish , being a woman, she should write more responibly..

    I have started reading your blog..will take time to read them all ..

    keep writing..
    cheers,
    Janu

  5. sara says:

    good but bad i too hate ramani stories but her writing style is changed now

  6. jothi says:

    naan konja naala ninaichitrunhden. aana ivlo alasal indha topic la nadandirukunu ipathan paakaren. im toooooooo late. but very happy to join u all. i started to read
    her b4 6 months n i read 7 to 9 novels. really im tired. ramani ma’am pls try to change. nandha sir superb!

  7. நன்று சரா மற்றும் ஜோதி. அந்த சாரை மட்டும் கட் பண்ணிடுங்க ப்ளீஸ். ஸ்கூல் வாத்தியாரை கூப்பிடற மாதிரி இருக்கு.

  8. [...] பணிபுரியும் நந்தா, பக்காவாக ஒரு பதிவினை போட்டிருந்தார். அவருக்கு  பதில் எழுத [...]

  9. ஜெயா says:

    ஹலோ நந்தா,

    உங்களை இங்கே பார்ப்பதில் மிகுந்த சந்தோஷம் :)

    இதோ என்னுடையை வாழ்க்கையில் ரமணி சந்திரனின் பங்கு…
    படித்து உங்கள் பிரஷர் ஏறினால் நான் பொறுப்பல்ல…

    http://akhilnjaya.wordpress.com/2009/05/19/ramanichandranandme/

    ஜெயா.

  10. [...] பணிபுரியும் நந்தா, பக்காவாக ஒரு பதிவினை போட்டிருந்தார். அவருக்கு  பதில் எழுத [...]

  11. [...] அவர் ரமணி சந்திரனை பற்றி எழுதிய ஒரு பதிவை பார்த்துவிட்டு எப்படியாவது [...]

  12. shanmuga says:

    Some Stories are same concept but the reader gain information like that how to take decisions in a particular situation,and how to make a correct conversation.so any story or novel is only dependent on users thinking cabability and their konwledge growth

  13. Ano says:

    அருமையான உங்கள் விமர்சனம் என்னை RC அவர்களின் கதைகளை வாசிக்க வைத்தது. Great publicity by the way :)

    தான் செய்த தவறுகளை உணர்ந்து திருந்தி மன்னிப்புக்கேட்கும் மனிதர்களுக்கு இன்னொரு சந்தர்ப்பம் கொடுக்கலாம் அல்லவா? அதைத்தான் RC கதைகளில் வரும் நாயகிகள் செய்கிறார்கள் போலும்.

  14. Aagneslazar says:

    Mr. Nandha,
    If you dont like rc novels thats up to you. There are many fans for her novels whether you like it or not its none of our business.
    There are many things to worry about in this world. I think its not necessary to write such a comment on someone else when we are not capable of doing anything as such.
    I have collected nearly 60 novels of rc so far. Pl dont hurt others by doing so.

    aagneslazar

  15. //If you dont like rc novels thats up to you. There are many fans for her novels whether you like it or not its none of our business.
    There are many things to worry about in this world. I think its not necessary to write such a comment on someone else when we are not capable of doing anything as such.
    I have collected nearly 60 novels of rc so far. Pl dont hurt others by doing so.//

    இதுல இன்னொருத்தர் ஃபீலிங்கை ஹர்ட் பண்றது எங்க இருந்து வந்தது? உங்க பேச்சுக்கே வர்றனே. இப்போ உங்களுக்கு என் பதிவு பிடிக்கலைன்னா பேசாம கண்ணை மூடிக்கிட்டு போயிருக்கலாமே. ஏன் மெனக்கெட்டு கமெண்டு போடறீங்க? இது சும்மா கேட்கணும்னே கேட்டது. அப்படித்தான் உங்க கமெண்டும் எனக்கு தோணுச்சு.

    அதுவுமில்லாம நான் எங்கேயும் ர.சந்திரனை எனக்கு பிடிக்கலை. அதனால யாரும் படிக்காதீங்கன்னு கட்டளை போடலை. அவருடைய நாவல்களில் உள்ள தவறுகளைச் சுட்டிகாட்டி இதனால் எனக்கு பிடிக்கலைன்னு சொல்றேன். பெண்களைச் சிறுமைப்படுத்தும் விதமாய் எழுதும் அவரை எனக்கு பிடிக்காமல் போனது தவறில்லை என்று சொல்கிறேன். இதில் உங்களுக்கு ஏன் ஆவேசம் என்று புரிய வில்லை. எழுத்தாளனுக்கெதிராய் எந்த ஒரு விமர்சனத்தையும் எழுப்பக்கூடாதா என்ன?

  16. jeya says:

    Oonga katuraya vida feedbacks rempa long. V good. Oonga yeluthuku yevlo fans keep it up.

    Ithaan fsttime oonga blogs padikrathu ini padipenanum theriyaathu. But very nice. Ramanichandran stories arasu kadai madhu pola…
    Oonmai purinthaalum naan inum books kidaicha padichutu thaan eruken. :)

  17. jeni says:

    I am reaaallllly happy to read this article, like jothi
    says i’m also very late to make a comment. I completely support nandha’s words that”RC heroines dont have any self respect”.she always portrays her heroine as an angel(in beauty) who comes down from heaven but they dont have any brain to analyse problem(correctly).some examples
    I have also read ‘kane maniyea’ you explained earlier ,in that climax hero save heroine from villain and he himself try to abuse her. At that time ‘immoral’ hero’s mother give an entry(it was hilarious) and explain about heroine sacrifice , kindness,blah blah blah at the end they marry.
    In another novel (i forgot the name)
    heroine was engaged to her cousin who was a graduate in BITS pilani on other hand her sister comes from america and she fallen in love with same guy .Heroine’s sister cunningly separate them. But our heroine dont even think bad about her sister and sacrifice her love and treat her sister as six months baby. Later hero who a millionaire asks her to marry for some commitments and she agrees. Her sister again poke her nose to get her sister’s husband. But heroine stupidly believes everyone. She dont show any kind of intelligence in her personal life but in official, she was good performer.
    i think she has multiple personality disorder. At end ………hhmmm its usual
    In another novel heroine belongs to rich family and hero was poor clerk .she was married to him by her father for some reasons.Heroine do all hard works in home and hero dont care about her pain but to cover up those cruelities there are some honey coated dramas . At some point hero raise a doubt about her pregnancy, hero call her cousin as the father of the child.More than that he compare his wife with prostitute ,it was totally vulgar words and explanation. After reading that i lost all my tempers and thrown away the book.I guessed the climax and i skipped many pages and read climax (with lots of
    patience and to know whether my guess going to be wrong but) in that shameless heroine patch up with her bloody cruel husband who raised to good position. Next day first and foremostly i returned that non sense book to my friend who gave that to me and praised that novel.
    I had a hot argument with my friend about that novel.Really it takes two days to control my anger
    Being a girl i was shaken by that novel.i decided not to touch her novel after that .Husband calling his wife as prostitute ,even after reading these nuisance people are ready to buy those novels. Her stories are family based but dont have any good moral, decency, culture etc.It contains immoral, self respectlessness , premarital sex .Are people mind was spoiled by this reading.Dont they ashamed to call themself as RC’s fans.
    ரமணி சந்திரனின் கதை பிடிக்காதவர்களும் இருக்கிறார்களா என்று. அவர் கதையில் வரும் கதாநாயகிகள் பாஸிடிவாக நினைத்து செயல்புரிபவர்கள். பிரச்சினைகள் வரும், அவற்றை அவர்கள் அழகாகச் சமாளிப்பார்கள். அவர் கதைகளின் டெம்பிளேட் ஒன்றும் பெரிய கம்ப சூத்திரம் அல்ல. ஆனால் எனக்கு மிகவும் பிடித்த டெம்பிளேட் அது. கதாநாயகர்கள் வெறும் சப்போர்ட் ரோல்தான் செய்வார்கள். கதாநாயகிகள் எல்லோருமே தைரியம் மிக்கவர்கள்…. விதியே என்று அழுது கொண்டு உட்காராது ஆக்கம் புரிபவர்கள்
    After reading this made me roll over the floor laughing (as nandha says).I would say RC readers are like addict they know it worthless but also cant get out from that . Many of them accepted all the stories have same template.millions of good books are there to read. RC books are good for nothing. Accidentally i read this article i’m happy to make my points here.I stopped reading her novel for past 1 year.
    Anyway i appreciate you Mr.Nandha for your great job.

    Jeni

  18. thusya says:

    maukiral oru mathu kathay padica hero mala vara kovathavide herone mala than athigam kovam varum

  19. வே. இளஞ்செழியன் says:

    ‘மில்ஸ் & பூண்’ வகையான புணைவுகளைத் தயாரித்து வெளியிட்டு வரும் ரமணி சந்திரனுக்குத் தமிழர்களிடையே இருக்கும் பேராதரவு வியப்பான ஒன்றாக எனக்குப் படவில்லை. வாசக மக்களின் எதிர்பார்ப்புகளை நன்கு புரிந்து வைத்திருக்கிறார்; அதற்கேற்றாற் போல் எழுதுகிறார். எல்லா சமூகத்திலும் இத்தகைய கிலுகிலுப்பு எழுத்தாளர்கள் இருக்கத்தானே செய்கின்றனர்.

    அது சரி … தசாவதாரத்தை அப்படி இப்படி என்று ஏதோ ஒரு விதத்தில் புகழவே செய்திருக்கின்றீர்கள். எனக்கோ அப்படம் மசாலாப் படங்களின் உச்சமாகப் பட்டது (படத்தின் முதல் சில நிமிடங்களைத் தவிர்த்து). பல சிறந்த இயக்குநர்களும் நடிகர்களும் திரைநுட்பவியலாளர்களும் தமிழ்த்திரையுலகிற்கு வந்துவிட்ட இன்றைய சூழலில், கமலில் பழைய பாசாங்குகள் இனியும் வேலை செய்யுமா என்பது சந்தேகமே. தசாவதாரத்திற்குப் பின் வெளிவந்த ‘உன்னைப் போலொருவன்’ என்ற அறைவேக்காடும் கமலின் எடுபடாத் தன்மையையே நிதர்சனமாக்குகின்றன அல்லவா? ஏதோ உலகத் தரம் வாய்ந்த திரைப்படைப்புகளை உருவாக்குவதாக எண்ணிக்கொண்டு இங்கும் அங்கும் பொருந்தா குழப்பங்களையன்றோ அவர் நமக்கு அளிக்கின்றார் … பாவம் (நாம்).

  20. அனைவருக்கும் நன்றி. இத்தனை பேர் ரமணி சந்திரன் நாவல் விஷயத்தில் கடுப்படைந்திருக்கிறார்கள் என்பதே மிகப்பெரிய ஆறுதல்.

  21. Ram says:

    Really excellent

  22. sathya says:

    nanda very good article. idu unga manasula mattum ila neraya per ipadi patta kadai ya dan eludharanga. but y d ladies like this format stories?… by the do u like rajesh kumar and indra sowndar rajan stories? else u like which one writer is the best one?

Leave a Reply