nav-left cat-right
cat-right

உன்னால் மட்டும் முடிவதெப்படி

அதெப்படிறா மாமூ!
இவளுங்களால மட்டும் இதெல்லாம் முடியுது?
“குருவி கூடு கட்டறதை ரசிக்கறது,
மழையைப் பார்த்தா துள்ளி குதிக்கறது,
நாய்க்குட்டியை ஓட விட்டு துரத்தி பிடிக்கறது,
குழந்தைங்களைப் பார்த்தா உலகத்தையே மறந்துடறது,
சின்ன காயத்துக்குக் கூட மும்தாஜ் கணக்கா
‘ஐயோ பாவம்’னு உருகறது,
பட்டம், பலூன், பஞ்சு மிட்டாய்,
நெல்லிக்காய் னு
வரைமுறை இல்லாமல்
எதைப் பார்த்தாலும் ஆச்சர்யப்படுவது.
இதெல்லாம் ரொம்ப ஓவர்றா !”

நானும் சொல்லித் திரிந்தவன்தான்.
நாயர் கடையில் நின்று கொண்டு,
கூட்டமாய் செல்லும் பெண்களைப் பார்த்து,
நானும் சொல்லித் திரிந்தவன்தான்.

ஆனால்,
அன்றொரு மதிய வெயிலில்,
காரணமில்லாமல் தோன்றிய,
யாருமே மதிக்காத,
அந்த மங்கிய வானவில்லைப் பார்த்து,
“வாவ்! எவ்ளோவ் நல்லா இருக்கு பாரேன்
ச்சோ ச்வீட் !”
என்று நீ சொன்ன போது,
வானவில்லை விட, நீ சொன்ன
வார்த்தைகளை ரொம்ப ரசித்தேன்.

அன்று இரவு என் நண்பனிடம் கூறினேன்.
“ஒண்ணுத்துக்கும் உதவாத விஷயங்களை
ரசிக்கறதுல கூட
ஒரு சுகம் இருக்குடா மச்சான் !”

3 Responses to “உன்னால் மட்டும் முடிவதெப்படி”

  1. ரவிசங்கர் says:

    காதலி என்றில்லை, பெண் நண்பிகளுடன் பழகும்போது கூட சமயங்களில் இது ஒரு தொல்லை. lamp postஐ கூட சில சமயம் ரசிப்பார்கள் :)

  2. சினேகிதி says:

    \\சின்ன காயத்துக்குக் கூட மும்தாஜ் கணக்கா
    ‘ஐயோ பாவம்’னு உருகறது,
    \\

    ithu madum vilangella:-))

  3. Ravichandra says:

    அதெப்படிறா மாமூ!

Leave a Reply