நகரம் மற்றும் கிராமம் சார்ந்தவைகளைப் பற்றிய சில அர்த்தமற்ற புலம்பல்கள்

முகத்தில் அணிந்திருக்கும் அறிவு ஜீவி முகமூடியைக் களைந்து விட்டு, எந்த வித போலித்தனமுமில்லாமல் அர்த்தங்களற்று பேசித்திரிய மனது விரும்புகின்றது.
நகர வாழ்க்கையின் வெம்மை என்னை கொஞ்ச கொஞ்சமாய் விழுங்கிக் கொண்டிருக்கிறது! நின்று நிதானித்து கடந்த சில நாட்களாய் நான் என்ன செய்து கொண்டிருக்கிறேன் என்று திரும்பிப் பார்த்தால் ஒன்று மட்டுமே புரிந்திருக்கின்றது. நான் வெறுமனே ஓடிக் கொண்டிருந்திருக்கின்றேன். இனிமேலும் வெறுமனே ஓடிக் கொண்டேதான் இருக்க வேண்டும் என்று நகரம் எனக்கு சொல்லிக் கொண்டே இருக்கின்றது. “மச்சான் நான் இப்போ […]

Read Full Post »

ரமணி சந்திரன், வலையுலக ஃபோபியா - சொல்ல மறந்த கதைகள்

என்னைக் கேட்டால் ஒன்று சொல்லலாம் ரமணி சந்திரன் நாவலின் நாயகிகளை பேசாமல் “சுயமரியாதை இல்லாத ஜென்மங்கள்” என்று அடைமொழி இட்டுக் கூப்பிட்டுக் கொள்ளலாம். அதைவிட இப்படி எல்லாம் எழுதும் இவர்தான் பெண்களின் எழுத்தாளர் என்று எவரேனும் சொல்லும் போது சொல்லுபவர் மீது ஒரு பரிதாப உணர்வுதான் ஏற்படுகிறது. ஆண் கொஞ்சம் அப்படி இப்படித்தான் இருப்பான், பொம்பளைப் புள்ளைதான் கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிப் போகணும் என்ற ஒரு வகையான தாழ் மன உணர்வுகளையும், அழகியலும், பாலியல் ஏக்கங்களும், மசாலாவும் சேர்ந்து கலந்த ஒரு கனவுச் சூழ்நிலையில் பல வாசகர்களை தன் சுயம் தொலைத்து விட்டு வாழ வகை செய்ததையும் தாண்டி, பெண்களின் எழுத்தாளர் என்று சொல்லிக் கொள்ளும் ரமணி சந்திரனின் எழுத்துக்கள் சாதித்தது என்ன?
———————
தசாவதாரத்தைப் பற்றி எழுதவே பயமாயிருக்கிறது. ஏதோ ஃபோபியா வந்தது போல எங்கு திரும்பினாலும் அதே புராணம்தான். அந்த காரணத்தினாலேயே தலைப்பில் கமல் என்றோ, தசாவதாரம் என்றோ வைக்க வெறுப்பாயிருக்கிறது. ஒட்டு மொத்தமாய் பார்த்தால் படம் பார்த்து நான் சற்றே ஏமாற்றம் அடைந்தது என்னவோ உண்மைதான். படத்தின் முதல் அரைமணி நேரமும், கடைசி அரைமணி நேரமும் கொடுத்த பிரமிப்பை படம் முழுதுமே கொடுத்திருந்தால் இப்படம் ஒட்டு மொத்த தமிழ் சினிமாவிலேயே சிறந்த படங்களில் ஒன்றாய் வந்திருக்கக் கூடும். நடுவில் ஏற்படும் தொய்வுகளினால் அது தவறிப் போயிருந்திருக்கிறது. ஆனால் ஒட்டு மொத்தமாக இந்த படத்தை குப்பை என்ற அளவுக்கு என்னால் சொல்லத் தோன்ற வில்லை. மீடியாக்களின் அதிககபட்ச ஹைப்பும், நம்முடைய அதிகபட்ச எதிர்பார்ப்பும் சேர்ந்து மற்றவர்களுக்கு எல்லாம் பாஸ்மார்க் 35 என்றால் கமலுக்கு மட்டும் 80 என்று வைத்து அளவிடத் தோன்றி இருக்கின்றது.

Read Full Post »

சந்தோஷ் சுப்ரமணியம், யாரடி நீ மோகினி - ஒரு பார்வை

தொடை தெரிய 4 பாட்டிற்கு வந்து இடுப்பை ஆட்டி விட்டு போகும் கதாநாயகிகளின் படங்களுக்கு நடுவே நாயகியை படம் முழுதும் முழு உடையிலேயே வலம் வர வைத்ததற்கே இயக்குநருக்கு தனியாக ஒரு சபாஷ் போட வேண்டும். ஜெயம் ரவி, பிரகாஷ் ராஜ் இருரையுமே சர்வ சாதாரணமாய் தூக்கி சாப்பிட்டு விடுகிறார் ஜெனிலியா எனும் ஹாசினி. ஒரு குழந்தையின் குதூகலத்தை, குறும்புகளை, மழலைச் சிரிப்பை எப்படி நாள் முழுக்க உட்கார்ந்து பார்த்துக் கொண்டே இருக்கலாமோ அது போல படத்தில் இவர் செய்யும் செய்கைகளை, அமைதியாக உட்கார்ந்து ரசித்துக் கொண்டே இருக்கலாம். இதற்கு முன்பு இது போன்ற வேடங்களை லைலாதான் செய்திருக்கிறார். அதில் காணப்படாத ஓர் அழகியல் உணர்வு இவரிடத்தில் கொஞ்சம் அதிகமாகவே தெரிகிறது.

—————————————————-
”யாரடி நீ மோகினி” படத்தைப் பற்றி என்ன சொல்வது?? ஆரம்பிக்கும் முன்னே ஒன்றே ஒன்று சொல்லி விடுகிறேன். நீங்கள் இந்தப் படத்தை ரசித்துப் பார்த்தீர்களா?? நான் இந்தப் படத்தின் மீது வைக்கும் விமர்சனம் உங்களுக்கு ஒருவேளை கோபத்தைக் கூட வரவைக்கலாம். எனவே தொடர்ந்து படிப்பது உங்கள் இஷ்டம்.

என்னைக் கேட்டால் இது போன்ற படங்கள் ஒரு சாபக் கேடு என்றுதான் சொல்வேன். தெலுங்கில் இந்த படத்தை செல்வராகவன் இயக்கி இருக்கிறாராமாம். இது போன்ற கதையில், செல்வராகவன் மட்டும் எப்படி வித்தியாசமாய் எடுத்து விட முடியும் என்று இதன் தெலுங்குப் பதிப்பையும் பார்க்க விருப்பம்தான். ஆனால் இந்த படம் தந்த கோபத்திலிருந்தே நான் இன்னும் மீள வில்லை. இன்னொரு ரிஸ்க் எடுக்க பயமாய் இருக்கிறது. ரொம்பவும் சந்தோஷமாய் இருக்கும் ஒரு தருணத்தில் அதை பார்க்கலாம்.

Read Full Post »

தமிழ் சினிமாவின் பரிணாமம்: வளர்ச்சியா? வீழ்ச்சியா?

ஆக தமிழ் சினிமாவின் இன்றைய நிலை என்பது ஏதோ ஒரு 10 வருடங்களில் நடந்த மாற்றமோ, அல்லது வெகு சிலரால் திட்டமிட்டு ஏற்படுத்திய சிதைவுகளோ இல்லை. இது ஒரு பரிணாம வளர்ச்சி. ஒட்டு மொத்தமாய், மெது மெதுவாய் தன் மாற்றம் அடைந்திருக்க வேண்டிய ஓர் கலையமைப்பு, இங்கு மட்டும் இன்னும் ஆரம்பப் புள்ளிகளிலேயே அமர்ந்துக் கொண்டிருக்கிறது. இங்கே பொதுவாய் இரண்டு விதமான கூட்டம் இருக்கிறது. ஒரு பக்கம் தன் சினிமா கதாநாயகர்களை தங்கள் தலைவர்களாகவும், வழிகாட்டிகளாகவும் வரித்துக் கட்டிக் கொண்டு, “தலைவா” என்று உன்மத்தம் கொண்டுத் திரியும் கூட்டம். இவர்களைப் பொறுத்தவரை சினிமா என்பது ஓர் இச்சைப் பொருள். தன் கதாநாயகர்களை எதிர்த்துப் பேசுபவர்களையும், சினிமாவின் மீது தீவிர விமர்சனம் வைப்பவர்களையும் விரோதிகளாய்ப் பார்க்கும் கூட்டம் இது. இன்னொரு பக்கம் சினிமா என்றாலே அறுவறுப்பான ஒன்றாய், நினைத்துத் திரியும் அறிவு ஜீவிக் கூட்டம். இவர்களைப் பொறுத்தவரை சினிமாவும் சரி, சினிமாவைப் பற்றி பேசுபவர்களும் சரி, சாதாரணப் பிறவிகள். பரிதாபத்திற்குரியவர்கள். இப்படி இரு பெரும் கூட்டத்திற்கு நடுவே இருந்துக் கொண்டுதான் தமிழ் சினிமாவை பற்றியும் அதன் பரிமாணங்களைப் பற்றியும் நாம் பேச வேண்டியதாயிருக்கிறது.

Read Full Post »

தமிழ் சினிமா : விமர்சன சூழலும் நாயகிகள் எனும் நுகர்வுப் பொருளும்

ஆனால் தமிழ் சினிமா இங்கு சுய மரியாதையுள்ள மற்றும் படித்த பெண்களை கர்வக்காரிகளாகவும், அகம்பாவம் மிக்கவர்களாகவும், ஏழைகளையும், முதியவர்களை மதிக்காத திமிர் பிடித்தவளாகவுமே நமக்கு அடையாளப்படுத்தி வருகிறது. பாலிவுட்டுடன் போட்டி போடக் கூடிய அளவுக்கு சிறந்ததாய் தற்போது விளங்குவது நம் கோலிவுட்தான் என்று மார்தட்டிக் கொள்ளும் தமிழ் சினிமாவின் பல்வேறு திரைப்படங்களில், “அய்யா நம்ம சின்னம்மா பட்டணத்துல படிப்பை முடிச்சுட்டு நாளைக்கு வர்றாங்களாம்” என்று சொல்லும் ஓர் ஒற்றை வரியைத் தொடர்ந்து தொடங்கும் கதாநாயகியின் அறிமுகம். அவரது அறிமுக காட்சியில் ஒன்று அவர் ஏதேனும் ஒரு சிறுமியையோ, அல்லது ஓர் முதியவரையோ கோபம் கொண்டு அறைவாள் அல்லது தனது காரை அரை நொடி கூட பிரேக் போடத் தயங்குபவளாய் ஏதேனும் ஓர் கோழியையோ, ஆட்டையோ சாகடித்துச் செல்லும், ஓர் அற்ப பிறவியாகவே காட்டி வருகிறது.

இப்பொழுதெல்லாம், “எனக்கு ரொம்பப் பிடிச்சது, என்னோட டெட்டி பியர்தான்” என்று சிணுங்கிக் கொண்டே பேட்டி தரும் கதாநாயகிகளைப் பார்க்கையில் இரக்க உணர்வும், பரிதாபமும் மட்டுமே மிஞ்சி நிற்கிறது.

Read Full Post »

அஞ்சாதே - திரைப்பார்வை

மேட்டுப்பட்டி எனும் கிராமத்தில் ஊரையே ஏய்த்துப் பிழைக்கும், ஜமீன்தாராக வருபவர் ஆண்டை ஆவுடையப்பன். இவரது ஒரே மகள்தான் நாயகி சந்தியா. அதே கிராமத்தில் கூலி வேலை செய்து பிழைப்பவராக வரும் ராமய்யாவின் ஒரே மகன்தான் நாயகன் முத்துக்காளை. பட்டணத்தில் படிப்பை முடித்து விட்டு கிராமத்திற்கு வரும் சந்தியா, தனது பணத்திமிரினாலும், படித்தவள் எனும் கர்வத்தினாலும் அந்த ஊரிலுள்ள எல்லாரையும் அவமானப்படுத்திக் கொண்டு இருக்கிறாள். ஆனால் முத்துக்காளையை மட்டும் அவளால் ஒன்றுமே செய்ய முடியவில்லை. ஒவ்வொரு முறையும் எளிதாக […]

Read Full Post »

BCCI : மணி கட்ட ஆளில்லாததோர் பூனை

மரணத்தை விட பெரிய தண்டனை எது தெரியுமா? மறக்கப்படுதலும், நிராகரிக்கப் படுதலும் தான்.
இந்தியாவில் வேறு எந்த விளையாட்டுக்கும் கிடைக்காத அங்கீகாரம், புகழ், பணம், லைம் லைட் வெளிச்சம் எல்லாமே ஒரே இடத்தில் குவிந்து கிடப்பது என்னவோ கிரிக்கெட்டில் மட்டும்தான். ஆனால் ஒட்டு மொத்த இந்திய கிரிக்கெட்டையும் Represent செய்வதாக தன்னை முன்னிறுத்திக்கொள்ளும் BCCI யின் செயல்பாடுகள் சமீப காலமாய் கட்டுக்கடங்கா சர்வாதிகாரத் தன்மையுடன் சென்று கொண்டிருக்கிறதோ என்று எண்ண வைக்கிறது. அணி வீரர்களுக்கு என்று அவர்கள் விதிக்கும் […]

Read Full Post »

அன்புடன் அஜீத் - மனம் திறந்த பேட்டி எனது பார்வை

“பறத்தல் உன் சுதந்திரம் அன்று” என்று எந்த ஒரு பறவைக்கும் கட்டம் கட்டி விட முடியாது. ஆனால் தனக்காக ஒதுக்கப் பட்ட சிறு வட்டத்தைத் தாண்டி, தனது எல்லைகளை விரிவுபடுத்த வேண்டும் என்று, வெறும் நடிகனாய் மட்டுமே தான் அறியப் பட்டு விடக் கூடாது என்று, தனக்கென ஒரு பெரிய ரசிகர் கூட்டமே இருக்க, தன் சுயம் தேடி, தன் கனவுகளை தேடி, ஒரு பைக்/கார் ரேசராகவும் வாழ முயற்சித்த ஒரு தன்னம்பிக்கை நிறைந்த மனிதனாய் அஜீத் […]

Read Full Post »

காலம் காலமாய் மனைவிகள் இப்படித்தான் இருக்கின்றார்கள்

பெண்ணியம், பெண் விடுதலை அல்லது பெண்கள் பெற வேண்டிய உரிமைகள் என்ற பெயரில் எவரொருவர் வலையுலகிலும், எழுத்துலகிலும் சில கருத்துக்களை முன் வைக்கும் போது நேரடியாகவும், மறைமுகமாகவும்,அவரிடம் சில கேள்விகள் எழுப்பப் பட்டுக் கொண்டுதான் இருக்கின்றன.
எது பெண்ணியம்? பெண்கள் பெற வேண்டிய உரிமைகளின் வரையறை என்ன? என்ன செய்தால்தான் உங்களது இந்த கோரிக்கைகள் அடங்கும்? உண்மையிலேயே பெண்ணடிமைத் தனம் என்ற ஒன்று இருக்கிறதா? பெண்கள் அடிமைப் படுத்தப் பட்டதற்கு ஆண்கள்தான் காரணமா? நீங்கள் எல்லாம் எந்த காலத்தில் […]

Read Full Post »

கேள்விகளுக்குட்படுத்தப் பட வேண்டிய திருமண அமைப்புகள்

கேள்விகள் ஏதும் கேட்காமல் அன்றாட வாழ்வில் நமது குடும்பத்தில் நடக்கும் சிறப்பு விசேஷங்களில், நாம் கடைபிடிக்க ஆரம்பித்து இன்று வரை தொடர்ந்துக் கொண்டிருக்கும் ஒவ்வொரு சடங்குகள் மற்றும் சம்பிரதாயங்களிலும், நாம் சார்ந்த சாதீயத்தின் உட்கூறுகள் பல்லிளித்துக் கொண்டுதான் இருந்துக் கொண்டிருக்கின்றன. ந்மது சடங்குகளைக் கேள்விக்குட்படுத்தாது இருக்கும் வரை நமது சமூகத்தின் ஒவ்வொரு செயலிலும், ஒவ்வொரு இடத்திலும் இந்த சாதீயக் கூறுகள் இடம் பெற்றுக் கொண்டுதான் இருக்கும்.
இதை ஏன் இப்படி செய்கிறோம்? இதற்கு என்ன அர்த்தம் என்று கேள்வி […]

Read Full Post »